கோபி செல்ல வினோபாநகரில் இருந்து 12-ம் எண் அரசு பஸ் அதிகாலை 4 மணிக்கு வாணிப்புத்தூர், டி.என்.பாளையம், பங்களாப்புதூர் வழியாக இயக்கப்படுகிறது. அதன்பின்னர் 1¾ மணி நேர இடைவெளிக்கு பிறகு தான் கோபிக்கு பஸ் விடப்படுகிறது. இதனால் கோபி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு செல்லும் வியாபாரிகள், பனியன் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், விவசாய தொழிலாளர்கள் உள்பட பலர் கடும் அவதிப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு வினோபாநகரில் இருந்து கோபி செல்ல அதிகாலை 5 மணிக்கு பஸ் இயக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.