ஆபத்தான வேகத்தடை

Update: 2026-06-21 18:20 GMT

திருப்பூர்-தாராபுரம் சாலையில், அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரி வளாகத்தில் புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த இடத்தில் வேகத்தடை உள்ளது என்று அறிவிக்கும் விதமாக வர்ணம் பூசப்படாமல் உள்ளது. மேலும் உயரம் சற்று அதிகமாக உள்ளது. இதன்காரணமாக அங்கு வரும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக, உள்நோயாளிகளை சக்கர நாற்காலியில் தள்ளி கொண்டு செல்லும் போது மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, ஆஸ்பத்திரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைக்கு வர்ணம் பூசி, உயரத்தை சற்று குறைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்