கண்ணமங்கலம் பேரூராட்சி புதிய சாலையில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிறுத்தம் என 2 இடங்கள் உள்ளன. வேலூர்- திருவண்ணாமலை மார்க்கமாகச் செல்லும் பஸ்கள் இங்கு நின்று செல்கின்றன. பழைய பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்த பயணிகள் நிழற்குடையை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையினர் இடித்து அகற்றி விட்டனர். இடித்த இடத்திலேயே புதிய நிழற்குடை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஏழுமலை, கண்ணமங்கலம்.