தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட் அருகில் பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு பல்வேறு மாவட்டங்கள், கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள், விவசாயிகள், பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் அந்த பஸ் நிலையத்தில் தண்ணீர், சுகாதார வளாகம் என அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே பயணிகளின் நலன் கருதி பஸ்நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.