தர்மபுரி அருகே உள்ள தடங்கம் ஊராட்சிக்குட்பட்ட தோக்கம்பட்டி பகுதியில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இது முறையான பராமரிப்பு இன்றி இருப்பதால் இங்கு பயணிகள் அமர்வதில்லை. தற்போது சேலத்தில் இருந்து வரும் பஸ்கள் தர்மபுரி புதிய பஸ் நிலையத்திற்கு இந்த பகுதியில் உள்ள சாலை வழியாக காலை முதல் இரவு வரை சென்று வருகின்றன. எனவே இந்த நிழற்கூடத்தை சீரமைத்து மீண்டும் பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.