கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2026-07-12 13:58 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகில் உள்ள பெருமாநாடு பஞ்சாயத்து மயிலாப்பட்டி மற்றும் வயலோகம் வழியாகக் கிளிக்குடி செல்லும் பஸ்சில் பள்ளி மாணவ-மாணவிகள் தினமும் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ்சில் இருந்து மாணவர்கள் கீழே விழுந்து காயங்களுடன் உயிர் தப்பினர். கூட்ட நெரிசலால் பள்ளிக் மாணவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் புல்வயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, இப்பகுதியில் கூடுதல் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்