கம்பத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பெரும்பாலான அரசு, தனியார் பஸ்கள் உத்தமபாளையம் நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாகவே சென்றுவிடுகின்றன. இதனால் கம்பத்தில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் பழைய பைபாஸ், பஸ் நிலையத்தில் நெடுநேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே ஊருக்குள் பஸ்கள் வந்துசெல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.