வந்தவாசியில் காய்கறி மார்க்கெட் மற்றும் மெயின் பஜார் வீதியில் அச்சரப்பாக்கம் கூட்டுச் சாலையில் நான்கு முனை ரோடு ஆகிய இடங்கள் வாகன போக்குவரத்து அதிகமுள்ள பகுதியாகவும், சாலைகள் சந்திக்கும் இடமாகவும் விளங்குகிறது. இந்தப் பகுதிகளில் போக்குவரத்து காவலர்களை நியமித்து போக்குவரத்தை சரி செய்தால் தான் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும். ஆதலால் உடனே காவல் அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அகிலன், சுரேஷ், சமூக ஆர்வலர்கள், சென்னாவரம்,