லாரிகளால் விபத்து

Update: 2026-02-08 16:42 GMT

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் இருந்து கிருஷ்ணகிரி நகருக்குள் வர சர்வீஸ் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தான் அனைத்து பஸ்களும், வாகனங்களும் வருகின்றன. இந்த இடத்தில் லாரிகள் அதிக அளவில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் சர்வீஸ் சாலையில் எதிர் திசையில் வரக்கூடிய பல வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கிறார்கள். இந்த சர்வீஸ் சாலையில் லாரிகள் நிறுத்தப்படுவதின் காரணமாக போக்குவரத்து நெரிசலும் அடிக்கடி ஏற்படுகின்றன. எனவே கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் நகருக்குள் வரக்கூடிய சர்வீஸ் சாலையில் லாரிகளை நிறுத்தாமல் இருக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்