பயணியர் நிழற்குடை தேவை

Update: 2026-07-05 17:19 GMT
புவனகிரி அடுத்த கீரப்பாளையம் ஊராட்சி முகையூர் கிராமத்தில் பயணியர் நிழற்குடை அமைக்கப்படவில்லை. அங்கிருந்து பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் கால்கடுக்க நின்று பஸ் ஏறி செல்ல வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி விரைந்து பயணியர் நிழற்குடை அமைத்து தர அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்