மோட்டார்சைக்கிள்களால் போக்குவரத்து நெரிசல்

Update: 2022-10-23 11:27 GMT

கண்ணமங்கலம் புதிய சாலை பஸ் நிறுத்தம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களை வங்கி முன்பு சாலையிலேயே நிறுத்தி விடுவதால், வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே வங்கி சார்பில் வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்த, தனி இடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

-கல்யாணசுந்தரம், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்