வாரச்சந்தையில் போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-21 15:04 GMT

ராணிப்பேட்டை அருகே சிப்காட்டில் வாரச்சந்தை தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே ஒவ்வொருவாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடக்கிறது. சந்தைக்கு வருபவர்கள் வாகனங்களை தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்துகின்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். வாகன விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சந்தையை முறைப்படுத்தி, வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்துவதை தடுத்து வேறு இடத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.

-ராஜாபாதர், ராணிப்பேட்டை.

மேலும் செய்திகள்