நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள வடுகம் குட்டக்கரை பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து குட்டக்கரை பகுதியில் இருந்து புதுப்பட்டி, மெட்டாலா, முனியப்பபாளையம் வழியாக கிராக்காடு, பட்டணம், ராசிபுரத்திற்கு பொதுமக்கள் அரசு பஸ்களில் சென்று வருகிறார்கள். இந்தநிலையில், குட்டக்கரை பஸ் நிறுத்தம் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் ஒரு சில இடங்களில் சிதலமடைந்து காணப்படுகிறது. மேலும், பஸ் நிறுத்தம் இரவு நேரங்களில் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறி விடுகிறது. அதாவது, இரவு நேரத்தில் மதுப்பிரியர்கள் மதுகுடித்து விட்டு மதுபாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு செல்கிறார்கள். இதனால் பஸ் நிறுத்தத்திற்கு வரும் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.