பஸ் வசதி தேவை

Update: 2026-06-14 12:38 GMT

நாகர்கோவிலில் இருந்து மேல ஆசாரிபள்ளத்திற்கு தடம் எண் 35, 35 ‘ஏ’ பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த பஸ்கள் மூலம் அப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பயன்பெற்று வந்தனர். தற்போது இந்த பஸ்கள் முறையாக இயக்கப்படுவதில்லை. மேலும், அந்த பஸ் நாகர்கோவில்-செண்பகராமன்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படுவதால் காலதாமதாமாக ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, நாகர்கோவிலில் இருந்து மேல ஆசாரிபள்ளத்துக்கு முழுமையாக காலை முதல் இரவு வரை அரசு பஸ்சை இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரசேகரன், மேலஆசாரிபள்ளம். 

மேலும் செய்திகள்