காஞ்சிபுரம் மாவட்டம் வெள்ளைகேட் பகுதியில் பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது. ஆனால், அந்த பஸ் நிறுத்தில், பஸ்கள் சரிவர நிறுத்துவதில்லை. இதனால் அங்கு பஸ் ஏற வரும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.