பென்னாகரம் கடைவீதி பகுதியில் பகல் நேரத்திலேயே கனரக வாகனங்கள் வருகிறது. அந்த வாகனங்கள் கடைவீதியில் நின்று சரக்குகளை ஏற்றி இறக்குகின்றன. இதன் காரணமாக தினமும் போக்குவரத்து இடையூறும், நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வாகன நெரிசலில் சிக்கி மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர். இதற்கு போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?