தேசூர் அருகே மகமாய்திருமணிக்கு டபிள்யூ-2 என்ற அரசு டவுன் பஸ் வந்தவாசியில் இருந்து இயக்கப்படுகிறது. அந்தப் பஸ்சை அமாவாசை, பவுர்ணமி தினங்களில் மாற்றுப்பஸ்சாக வேறு ஊருக்கு இயக்கப்பட்டு வருகிறது. மகமாய் திருமணிக்கு சரியாக வருவது இல்லை. அந்தப் பஸ்சை நம்பி இருக்கும் மக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் பெரும் சிக்கலாக உள்ளது. அமாவாசை, பவுர்ணமி தினங்களில் அரசு பஸ்சை சீராக இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ம.பழனி, மகமாய்திருமணி.