சென்னை மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் தடுப்புகள் போடப்பட்டுள்ளது. இதனால் பஸ் ஏற வரும் பயணிகள், பஸ் ஏற முடியாமல் தவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.