போடியில் இருந்து தேவாரம், உத்தமபாளையத்துக்கு இரவு நேரத்தில் அரசு பஸ்கள் முறையாக இயக்கப்படுவதில்லை. இதனால் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் தேவாரம், உத்தமபாளையம் திரும்பும் பொதுமக்கள் பஸ்கள் கிடைக்காமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் கூடுதல் கட்டணம் கொடுத்து தனியார் வாகனங்களில் செல்லும் நிலை இருக்கிறது. எனவே போடியில் இருந்து உத்தமபாளையம், தேவாரத்துக்கு இரவு நேரத்தில் அரசு பஸ்களை இயக்க வேண்டும்.