ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், தினமும் 10-க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்களில் காய்கறிகள், மளிகை பொருட்கள், பாத்திரங்கள், பழங்கள் தெருத்தெருவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவர்கள் விதிகளை மீறி அதிக சத்தம் எழுப்பும் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை பயன்படுத்துகின்றனர். எனவே உரிய அதிகாரிகள் வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை பரிசோதித்து, முறையான அனுமதி பெற்ற பிறகே விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.