கூடுதல் பஸ் வசதி வேண்டும்

Update: 2026-09-20 13:31 GMT

மதுரை பெரியார் பஸ்நிலையத்தில் இருந்து மேலூர் வழியாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பகல் நேரங்களில் பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படும் நிலையில் மாலை நேரங்களில் மேலூர் செல்ல போதிய பஸ்கள் இல்லை. இதனால் பள்ளி முடிந்து வரும் மாணவர்கள், பணி முடிந்து வரும் தொழிலாளர்கள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாலை நேரங்களில் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து தெற்கு தெரு, நரசிங்கம்பட்டி, சிட்டம்பட்டி வழியாக மேலூருக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். 

மேலும் செய்திகள்