வெண்ணந்தூர்-ராசிபுரம் செல்லும் பிரதான சாலையில் தச்சன்காடு அருகே அரசு மதுபான கடை அமைந்துள்ளது. இதனால் மதுபோதையில் சிலர் சாலையில் அங்கும், இங்கும் செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.