விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2026-09-20 14:07 GMT

பெரம்பலூரில் இருந்து அரியலூர் செல்லும் சாலையில் கிரஷர் மற்றும் சிமெண்டு ஏற்றிச் செல்லும் லாரிகள் அதிக வேகத்தில் செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர். எனவே பொதுமக்களின் பாதுகாப்பை கருதி லாரிகளை குறிப்பிட்ட வேக வரம்பிற்குள் இயக்க அறிவுறுத்தவும், விபத்துகளைத் தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி