வாலாஜா பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் மாலை வகுப்புகள் முடிந்ததும் வீடு திரும்புவதற்காக பஸ் நிலையத்துக்கு வருகின்றனர். அவ்வாறு வரும்போது போதிய எண்ணிக்கையில் பஸ்கள் இருப்பது இல்லை. கூட்ட நெரிசலால் மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்ய வேண்டி உள்ளது. அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளர் நடவடிக்கை எடுத்து எந்த மார்க்கத்தில் மாலை நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டுமோ அந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.
-குமரன், வாலாஜா.