புதிய வழித்தடத்தில் ரெயில்

Update: 2026-08-02 13:16 GMT

பாலக்காட்டில் தொடங்கி கரூர், நெரூர் சதாசிவம் கோவில், உன்னியூர், கூன்ராக்கம்பட்டி, முசிறி, துறையூர், பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் வழியாக தாம்பரம் வரை புதிய மார்க்கத்தில் பாதை அமைத்து பயணிகள் ரெயில் இயக்க வேண்டும். ஆன்மிகவாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் பலரும் வந்து செல்லும் வரலாற்று சிறப்புமிக்க கோவிலாக நெரூர் சதாசிவம் கோவில் உள்ளது. எனவே, இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று புதிய வழித்தடத்தில் ரெயில் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்