சென்னை கிளாம்பாக்கம்-திரு.வி.க.நகருக்கு காலை 6.30 மணிக்கு மேல் புறப்பட்டு செல்லும் பஸ்(வழித்தடம் எண் 104 டி), கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து வெளியில் வரும் இடத்தில் பயணிகள் ஏறுவதற்கு கை நீட்டினாலும் நிறுத்துவது இல்லை. இது தினமும் நடக்கக் கூடிய சம்பவமாகவே இருக்கிறது. காலி இருக்கைகளுடன் செல்லும் பஸ்சை சில வினாடிகள் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதில் அந்த பஸ் டிரைவர் மற்றும் நடத்துனருக்கு என்ன பிரச்சினை? இதுகுறித்து சம்பந்தப்பட்ட பஸ்சை இயக்கும் டிரைவர்கள், நடத்துனர்களுக்கு உரிய அறிவுரைகள் போக்குவரத்து துறை வழங்க வேண்டும்.