பந்தலூரில் பழைய பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் பஸ் நிலைய சுவர்களில் போஸ்டர்கள் உள்ளிட்டவை ஒட்டப்பட்டு அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இதனால் பஸ் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. அத்துடன் இருக்கைகளும் உடைந்து கிடக்கிறது. இதனால் பயணிகள் அமர இடமின்றி அவதிப்படுகிறார்கள். எனவே இருக்கைகளை சரி செய்வதோடு சுவர்களில் ஒட்டப்பட்டு உள்ள போஸ்டர்களை அகற்ற வேண்டும்.