ஆரணியில் இருந்து கோவைக்கு காலை, இரவு என 2 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது காலை நேரத்தில் மட்டும் பஸ் இயக்கப்படுகிறது. இரவில் இயக்கப்படுவது இல்லை. இரவில் பஸ் இயக்கினால் ஆரணியில் இருந்து நெல், அரிசி, பட்டுச்சேலை வியாபாரிகள், பட்டுச் சேலை தயாரிப்பாளர்கள் கோவைக்கு செல்ல வசதியாக இருக்கும். இரவு நேர கோவை பஸ்சை மீண்டும் இயக்க அரசு போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நெல்சன், ஆரணி.