அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து சுத்தமல்லி, விக்கிரமங்கலம் வழியாக அரியலூருக்கு காலை 8 மணி அளவில் இயக்கப்பட்டு வந்த அரசு புறநகர் பஸ் தற்போது இயக்கப்படுவதில்லை. இதனால் அந்த பகுதியில் இருந்து விக்கிரமங்கலம் மற்றும் அரியலூருக்கு செல்லும் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே அந்த வழித்தடத்தில் அரசு பஸ்சை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.