நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் அரசு பஸ்களில் அதிகமான கூட்டம் காணப்படுகிறது. இதனால் காலை, மாலை நேரங்களில் மாணவ, மாணவிகள் மற்றும் முதியோர் பஸ்களில் செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். அல்லது ஒன் டூ ஒன் பஸ்களை தடம் எண் பதித்து சாதாரண பஸ்களாக இயக்க வேண்டுகிறேன்.