கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்குச்சாலை வழியாக இயக்கப்படும் தனியார் பஸ்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி கூடுதலாக 5 முதல் 7 ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அரசு பஸ்களில் சாதாரண கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தனியார் பஸ்களில் மட்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால், பயணிகள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே தனியார் பஸ்களில் ஏற்பட்டுள்ள திடீர் கட்டண உயர்வு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.