போடி, தேவாரம், உத்தமபாளையம் வழித்தடங்களில் கடந்த 6 மாதங்களாக இரவு நேரங்களில் அரசு பஸ்கள் இயங்குவதில்லை. இதனால் வேலைக்கு சென்று தாமதமாக வீடு திரும்பும் தொழிலாளர்கள், பொதுமக்கள் பஸ் நிறுத்தத்தில் மணிக்கணக்கில் காத்திருக்க நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இரவு நேரம் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.