திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தில் இருந்து அதிகாலை 3.40 மணிக்கு துறையூர், திருச்சி, புதுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கு இயக்கப்பட்ட அரசுப் பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் திருச்சி வழியாக தொலைதூர பயணத்திற்கு செல்லும் பொதுமக்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட உப்பிலியபுரம் - காரைக்குடி பஸ் சேவையை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.