திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து கொப்பம்பட்டி, தம்மம்பட்டி, ஆத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் வழியாக சென்னைக்கு நேரடி பேருந்து வசதி இல்லை. இதனால் கொப்பம்பட்டி சுற்றியுள்ள கிராமப் பகுதி மற்றும் மாவட்ட எல்லைப் பகுதி மக்கள் சென்னைக்கு செல்ல பஸ் மாறி மாறி செல்ல வேண்டியிருப்பதால் கால விரயமும், பண விரயமும் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சென்னைக்கு நேரடி பஸ் சேவை தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.