காட்டுமன்னார்கோவிலில் உள்ள அரசு பள்ளியில் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு வருவதற்கும், வீடு செல்வதற்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் டவுன் பஸ்கள் இல்லாததால் சிரமப்படுகின்றனர். எனவே காட்டுமன்னார்கோவிலில் இருந்து வீராணம் ஏரிக்கரை வழியாக சேத்தியாத்தோப்பு மற்றும் சிதம்பரத்திற்கு கூடுதல் அரசு டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.