பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டாரப் பகுதிகளில் உள்ள மின்கம்பங்களில், ஆபத்தான முறையில் பிளாட் விளம்பரங்களும் கல்வி நிறுவன விளம்பரப் பலகைகளும் கட்டப்பட்டுள்ளன. பலத்த காற்று வீசும் காலங்களில் இவை காற்றில் பறந்து, அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது விழும் அபாயம் நிலவுகிறது. இதனால் உயிர்ச்சேதம் போன்ற பெரும் விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு, மின்கம்பங்களில் உள்ள இந்த விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.