அரசு பஸ் இயக்கப்படுமா?

Update: 2026-06-14 12:12 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து கல்லாத்தூர், வெத்தியார்வெட்டு, மீன்சுருட்டி வழியாக குட்டைகரை வரை தினமும் மூன்று முறை இயக்கப்பட்ட அரசுப் பேருந்து, தற்சமயம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. முன்பு சாலை பழுது காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீன்சுருட்டி வரை புதிய சாலை அமைக்கப்பட்ட பின்பும் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்களும், அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளும் போக்குவரத்து வசதியின்றி அன்றாடம் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவர்களின் நலன் கருதி இந்த வழித்தடத்தில் அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்