சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணன் பஜாரில் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்கின்றனர். இதனால் அவ்வழியே செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகனஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?