போக்குவரத்து நெரிசல்

Update: 2022-10-23 15:42 GMT

வேலூரை அடுத்த அலமேலுமங்காபுரம் பஸ் நிறுத்தம் அருகில் கனரக வாகனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் காலை நேரத்தில் பாலத்தின் அடியில் வந்து திரும்பி செல்கின்றன. இதனால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வேலைக்குச் செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரிக்குச் செல்வோர் குறிப்பிட்ட நேரத்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அந்தப் பகுதியில் போலீசார் காலை நேரத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டால், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் அனைவரும் பயன் அடையலாம். போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-அருண்குமார், ரங்காபுரம். 

மேலும் செய்திகள்