போக்குவரத்து இடையூறு

Update: 2023-04-12 17:10 GMT

போக்குவரத்து இடையூறு

திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ஊத்துக்குளி சாலை மிகவும் குறுகலான சாலையாகும். இந்த சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் தலைமை தபால் நிலையம் அமைந்துள்ளதால் தபால் நிலையம் வரும் பொதுமக்கள் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. சில நேரங்களில் வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே இதை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாாிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு தேவையான வசதி செய்து கொடுக்க வேண்டும்.

-பொன்செல்வம், வாலிபாளையம், திருப்பூர்.

மேலும் செய்திகள்