வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-09-26 14:47 GMT

வாகன ஓட்டிகள் அவதி

திருப்பூர் தாராபுரம் ரோட்டில் இருந்து வெள்ளியங்காடு 60 அடி ரோடு செல்லும் சாலையில் சமீபத்தில் பாதாள சாக்கடை பணிக்காக குழி தோண்டப்பட்டது. அதன்பின்னர் குழாய்கள் பதித்து பணி முடிந்து குழி மூடப்பட்டது. ஆனால் மீண்டும் அங்கு ரோடு போடாததால் சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் மண் குவியலால் புழுதி பறக்கிறது. இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்கள், சிறுவர,் சிறுமிகள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். கனரக வாகனங்கள் சாலையின் மண் குவியலில் சிக்கி நகர முடியாமல் சிரமப்படுகின்றன. எனவே வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

சிவா, திருப்பூர் 98412 85733

மேலும் செய்திகள்

பஸ் வசதி