டவுன் பஸ்கள் நிறுத்தத்தில் நிற்பதில்லை

Update: 2022-11-06 11:48 GMT

வேலூரில் இருந்து கண்ணமங்கலம் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிராமங்களிலேயே பஸ்களில் கூட்டம் நிரம்பி விடுவதால், பஸ்கள் கண்ணமங்கலம் மற்றும் கூட்ரோடு பகுதியில் நிறுத்தத்தில் நிறுத்தாமல், மேற்கொண்டு பயணிகளை ஏற்றாமல் தவிர்ப்பதற்காக சற்று தூரத்தில் நிறுத்துகிறார்கள். இதனால் டவுன் பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய காத்திருக்கும் மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு செல்ல முடியாமல் வீடு திரும்பும் அவலநிலை உள்ளது. மேலும் ஆரணியில் இருந்து வேலூர் செல்லும் தடம் எண்:214 என்ற பஸ் தற்போது கண்ணமங்கலம் வரை கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து கூட்ரோட்டில் விட்டு விடுகிறது. இங்கிருந்து டவுன் பஸ்கள் மூலம் இலவசமாக கல்லூரி மாணவ-மாணவிகள் பயணம் செய்யலாம். ஆனால் யாரும் பயணம் செய்ய முடியாமல் டிரைவர், கண்டக்டர்கள் மாணவ-மாணவிகளை அழைத்துச் செல்லும் பணியை தவிர்க்கின்றனர். எனவே போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்குமா?

-தேவதாஸ், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி