புதிய பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் தேவை

Update: 2023-06-18 13:54 GMT

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் செடிகள் வளர்ப்பதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடம் பள்ளமாக உள்ளது. மழை பெய்யும் நேரத்தில் தண்ணீர் தேங்கி குட்டைபோல் காட்சி அளிக்கிறது. புதிய பஸ் நிலையத்தில் ஒரு சில இடங்கள் பழுதடைந்துள்ளன. அதை, புதிய பஸ் நிலையத்தை கட்டியவர்களே சீரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். புதிய பஸ் நிலையத்தில் வடக்கு திசையில் மயானத்தையொட்டி உள்ள கழிவறை வளாகத்துக்கு நீரேற்றும்போது தொட்டி நிரம்பி பஸ் செல்லும் வழியில் கழிவறையின் பின்பக்கமாக தண்ணீர் ஆறாக ஓடுகிறது. அந்தக் கழிவறையில் தண்ணீர் வீணடிப்பதை அதிகாரிகள் தடுக்க வேண்டும். இவ்வாறாக புதிய பஸ் நிலையத்தில் பல சீரமைப்பு பணியை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவநேசன், முத்துமண்டபம்.

மேலும் செய்திகள்