நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்

Update: 2023-03-29 16:37 GMT

வந்தவாசி-திருவண்ணாமலை தேசூர் வழியாக வந்தவாசி 2-வது பணிமனைக்கு சொந்தமான தடம் எண்:144 என்ற பஸ் இயக்கப்பட்டு வந்தது. அந்தப் பஸ்சை தற்போது நிறுத்தி விட்டார்கள்.

அதேபோல வந்தவாசி 1-வது பணிமனைக்கு சொந்தமான தடம் எண்:141 என்ற பஸ் தேசூர்-செஞ்சிக்கு இயக்கப்பட்டு வந்தது. அந்தப் பஸ்சையும் நிறுத்தி விட்டார்கள். இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எமரேசன், தேசூர்.  

மேலும் செய்திகள்