வேகத்தடையில் வெள்ளைக்கோடு

Update: 2023-12-03 17:47 GMT

வேகத்தடையில் வெள்ளைக்கோடு

திருப்பூர் போயம்பாளையத்தில் இருந்து நெருப்பெரிச்சல் வரையிலான பகுதியை இணைக்கும் வகையில் சமீபத்தில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையில் விபத்தை தவிர்க்கும் வகையில் நான்கு இடங்களில் வேகத்தடை உள்ளது. ஆனால் இந்த வேகத்தடை உள்ளதை குறிப்பிடும் வகையில் அதன் மீது வெள்ளை கோடுகள் போடாமல் இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கவனம் சிதறி விபத்துக்கு வழிவகுக்கிறது. மேலும் புதிய சாலையிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது. சாலையில் ஆங்காங்கே மண் குவியல் காணப்படுகிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி வெள்ளை வர்ணம் பூசுவதுடன் சாலையை சீரமைக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

ஜேம்ஸ், திருப்பூர்.

மேலும் செய்திகள்