வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2022-09-26 14:49 GMT

வேகத்தடை அமைக்க வேண்டும்

திருப்பூர் வளர்மதி பாலம் அருகே பார்க் ேராடு உள்ளது. ரெயில் நிலையத்துக்கு செல்லும் வாகனங்கள், மற்றும் அவினாசி ரோட்டுக்கு செல்லும் பலரும் இந்த பாதையை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்துகொண்டே இருக்கும். இந்த சாலையில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்துவருகிறார்கள். இந்த வழியாக வாகனங்கள் வேகமாக வருவதால் பாதசாரிகள், மாணவர்கள் சாலையை கடக்க பூங்கா அருகே நடைமேடை உள்ளது. சிலர் சாலையை கடந்தும் செல்கிறார்கள். இதனால் அந்த பாதையில் வேகமாக வரும் வாகனங்களால் விபத்து நிகழும் வாய்ப்பு உள்ளது. எனவே அந்த சாலையில் பள்ளி அருகே உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர், மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகத்தினர் இதை கவனித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வின்சென்ட் திருப்பூர் 95008 17499

மேலும் செய்திகள்

பஸ் வசதி