சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்

Update: 2022-09-29 17:54 GMT

வாணியம்பாடி, ஆலங்காயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சென்னை, பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு வேலைக்காக சென்றுள்ளனர். அவர்கள், பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு திரும்புவார்கள். அதன்படி வெளியூரில் இருக்கும் பலர் வருகிற தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு திரும்புவார்கள். எனவே தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மேற்கண்ட ஊர்களில் இருந்து வாணியம்பாடிக்கு சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும்.

-அருள்ராஜன், வாணியம்பாடி.

மேலும் செய்திகள்

பஸ்வசதி