கிராமங்களுக்கு செல்லாமல் நடு வழியில் திரும்பு பஸ்

Update: 2022-11-02 11:16 GMT

வேலூரில் இருந்து கண்ணமங்கலம் வழியாக ரெட்டிபாளையம், வாழியூர், காளசமுத்திரம், ஒண்ணுபுரம், புதுப்பாளையம், மேல்நகர் உள்பட பல்வேறு கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த டவுன் களை நம்பி கிராம மக்கள் பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளும் பயணம் செய்து வருகின்றனர். வேலூரில் இருந்து வரும் ரெட்டிபாளையம் பஸ் கிராமங்களுக்கு செல்லாமல், கண்ணமங்கலம் பகுதியில் திரும்பி மீண்டும் வேலூர் சென்று விடுகிறது. காலை, மாலை இரு வேளையும் விடுமுறை இன்றி பணி செய்யும் டிரைவர், கண்டக்டர் தங்களுக்கு ஓய்வு வேண்டி கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளதாகவும், இதனால் நடுவழியிலேயே திரும்பி சென்று விடுவதாகவும் கூறுகின்றனர். இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் ஏமாற்றம் அடைகிறார்கள். எனவே அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பஸ் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜவகர், கண்ணமங்கலம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி