கனரக வாகனங்களால் மக்கள் அவதி

Update: 2024-01-14 17:27 GMT

வாலாஜாவை அடுத்த கிராமப்புற ஊர்களுக்கு செல்லும் படியம்பாக்கம்-பொன்னப்பந்தாங்கல் சாலையில் அனந்தலை மலையில் இருந்து கற்கள், ஜல்லிகள், மணல், பாறாங்கற்கள் ஆகியவற்றை கார்ப்பரேட் நிறுவனங்கள் கனரக வாகனங்களில் ஏற்றி செல்கின்றன. அதிக பாரம் ஏற்றிச் செல்வதால் ஆங்காங்கே கனரக வாகனங்கள் பழுதடைந்து நடு வழியில் நின்று விடுகின்றன. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். அந்த கனரக வாகனங்களை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

-மதன்குமார், வாலாஜா. 

மேலும் செய்திகள்