வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தி தர வேண்டும்

Update: 2022-08-04 15:21 GMT

திருப்பத்தூரில் வடஅக்ரஹாரம் தெருவில் ஒரு அரசு வங்கி உள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்கள் தெருவில் இரு சக்கர வாகனங்களை நிறுத்துகிறாா்கள். இதனால் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. திடீரென வரும் ஆம்புலன்ஸ் உள்ளே வர முடியவில்லை. எனவே வங்கி உடனடியாக வாகன நிறுத்தும் இடத்தை ஏற்படுத்தி தர வேண்டும். இதேபோல் திருப்பத்தூரில் உள்ள அனைத்து அரசு, தனியார் வங்கிகள் முன்பு வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு வாகன நிறுத்துமிடத்தை ஏற்படுத்தி தர வங்கிகள் முன்வர வேண்டும்.

திருநாவுக்கரசு, திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்